கோவையில் அரை டன் குட்கா பறிமுதல் - ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் உட்பட ஐந்து பேர் தனிப்படை போலீசாரால் கைது

சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையின் போது, ஒரு காரில் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான அரை டன் குட்கா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் உட்பட தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கோடகவுண்டர்புதூர் பிரிவு அருகே சூலூர் காவல் ஆய்வாளர் மாதையின் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை தணிக்கை செய்த போது, இருக்கையில் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்துப் பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தன.

சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய, காரில் புகையிலை பொருட்களை நடத்திய ராஜஸ்தானை சேர்ந்த கன்பட்ராம் (25), தினேஷ் (20), ஹட்மட்டா ராம் (32) மற்றும் தமிழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம் (27), சரவணகுமார் (47) உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 78 கிலோ கூல் லிப், 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ ஹான்ஸ், ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 114 கிலோ விமல், 13 ஆயிரம் மதிப்புள்ள 36 கிலோ கணேஷ், 14,000 ரூபாய் மதிப்புள்ள 46 கிலோ ஸ்வாக், 30,000 ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ டொபாக்கோ பறிமுதல் செய்த போலீசார் TN 57 BK 6190 என்ற டாட்டா ஹாரியர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அரை டன் புகையிலை பொருட்களின் மதிப்பு நான்கு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் எதிர்வரும் காலங்களில் குட்கா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...