மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய மனித சங்கிலி போராட்டம், ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தில், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ கண்டன பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், தமிழ்வேந்தன், மதிமுக மாவட்ட செயலாளர், நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், ரவிசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முத்துக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். நசீருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர், முஸ்தபா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணை தலைவர்.சாவித்திரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர், சந்தோஷ், தமிழ் புலிகள் கட்சி, என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.