தேனீக்களால் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை

சிம்ஸ் பூங்காவில் இருந்த தேன்கூடுகள் கலைந்ததால், சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் தாக்க துவங்கியது. புகை மூட்டி தேனீக்களை விரட்டும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: தமிழகத்தின் பிரபலமான சுற்றுலம் நீலகிரி மாவட்டம் ஆகும். அங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கில் வந்து செல்கின்றனர்.



அங்கு ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் என சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடங்கள் அதிகமாக உள்ளன.

இன்று, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்த தேன் கூடுகள் கலைந்தன. இதனால், தேன் கூடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தேனிகள் வெளியேறியது.

பூங்கா முழுவதும் பறந்த தேனீக்கள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை தாக்க தொடங்கியது. இதனால் பதட்டமடைந்த சுற்றுலாப் பயணிகள், தங்களை பாதுகாத்து கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். இதனால், பூங்கா முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.



தேனீகள் தாக்கியதில் பூங்கா ஊழியர் சிவக்குமார் உட்பட கேரளாவை சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.



இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் 5 இடங்களில் புகை மூட்டி தேனீக்களை விரட்டினர்.



உடனடியாக, பூங்காவை விட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தேனீக்கள் பிரச்சனை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...