நீலகிரி மாவட்டம் உதகையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார்.
நீலகிரி: ஊட்டி அருகே 7ம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தந்தை அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
தினமும் வேலைக்கு செல்லும்போது மாணவியின் தந்தை பக்கத்து வீட்டில் உள்ள ஸ்ரீகாந்த் என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கூடம் முடிந்து விட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் ஶ்ரீகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார்.
அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.
தினமும் வேலைக்கு செல்லும்போது மாணவியின் தந்தை பக்கத்து வீட்டில் உள்ள ஸ்ரீகாந்த் என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கூடம் முடிந்து விட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் ஶ்ரீகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார்.
அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.