உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார்.


நீலகிரி: ஊட்டி அருகே 7ம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தந்தை அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

தினமும் வேலைக்கு செல்லும்போது மாணவியின் தந்தை பக்கத்து வீட்டில் உள்ள ஸ்ரீகாந்த் என்பவரிடம் வீட்டு சாவியை கொடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கூடம் முடிந்து விட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் ஶ்ரீகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...