கடந்த 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்த பணி மேம்பாடு முழுமையாக அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்
கடந்த எட்டு ஆண்டுகளாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த இணை பேராசிரியர் பணி மேம்பாட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலின்படி உரிய திருத்தம் செய்து கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் மற்றும் ஆய்வியல் நெறிஞ்சர் பட்டத்திற்கான ஊக்க தொகை உடனடியாக வழங்க வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாடு உட்பட அனைத்து தேக்க நிலையை தவிர்ப்பதற்கு அறிவிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகிய இந்த நான்கு கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி மாலை அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வரும் அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் மையங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் போது, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே, தமிழக உயர்கல்வித்துறை உடனடியாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
கடந்த எட்டு ஆண்டுகளாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த இணை பேராசிரியர் பணி மேம்பாட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலின்படி உரிய திருத்தம் செய்து கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் மற்றும் ஆய்வியல் நெறிஞ்சர் பட்டத்திற்கான ஊக்க தொகை உடனடியாக வழங்க வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாடு உட்பட அனைத்து தேக்க நிலையை தவிர்ப்பதற்கு அறிவிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகிய இந்த நான்கு கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி மாலை அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வரும் அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் மையங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் போது, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே, தமிழக உயர்கல்வித்துறை உடனடியாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.