நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்த பணி மேம்பாடு முழுமையாக அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோரிக்கைகள்

கடந்த எட்டு ஆண்டுகளாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த இணை பேராசிரியர் பணி மேம்பாட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலின்படி உரிய திருத்தம் செய்து கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் மற்றும் ஆய்வியல் நெறிஞ்சர் பட்டத்திற்கான ஊக்க தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாடு உட்பட அனைத்து தேக்க நிலையை தவிர்ப்பதற்கு அறிவிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறாமல் உள்ள ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகிய இந்த நான்கு கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி மாலை அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வரும் அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் மையங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் போது, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக உயர்கல்வித்துறை உடனடியாக சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...