கோவை பீளமேடு, பாரதிகாலனிகளில் செயல்பட்டுவரும் தூய்மைப்பணிகளை மாவட்ட ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவை: வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட பீளமேடு, பாரதி காலனி பகுதியில் மழைநீர் வடிகாலில் உள்ள குப்பைகள், செடி கொடிகள், அடைப்புகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், பழுதான பகுதிகளை புனரமைக்கவும், தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் கட்டவும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினர்.

அப்பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்தவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பீளமேடு, பாரதி காலனி பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றி பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.

மேலும் பிற பணிகளில் ஈடுபடுபவர்களை பார்வையிட்டு, விளாங்குறிச்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் (Micro Compost center) தயாரிக்கும் மையதில் நேரில் ஆய்வு செய்து, தேவையான இயந்திரங்கள் வாங்கி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளா் அவர்கள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலா் விமலா, சுகாதார அலுவலா் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் ஜோதி விநாயகம், நாசா் மற்றும் மாநகராட்சி அலுவலாகள் உடனிருந்தார்கள்.
அப்பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்தவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பீளமேடு, பாரதி காலனி பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றி பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.
மேலும் பிற பணிகளில் ஈடுபடுபவர்களை பார்வையிட்டு, விளாங்குறிச்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் (Micro Compost center) தயாரிக்கும் மையதில் நேரில் ஆய்வு செய்து, தேவையான இயந்திரங்கள் வாங்கி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளா் அவர்கள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலா் விமலா, சுகாதார அலுவலா் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் ஜோதி விநாயகம், நாசா் மற்றும் மாநகராட்சி அலுவலாகள் உடனிருந்தார்கள்.