பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தின் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் திடீர் ஆய்வு

ஆவணங்களை ஆண்டு வாரியாக ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள், விவசாயிகள் நில ஆவண நகலை கோரும்போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய நில ஆவணங்களின் நகல் கேட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பங்கள் அளித்து வந்தனர். ஆனால், நில ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்வையிட்டார்.



இதனையடுத்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை வருடம் வாரியாக ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நில ஆவணங்களின் நகலை கேட்டால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...