ஆவணங்களை ஆண்டு வாரியாக ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள், விவசாயிகள் நில ஆவண நகலை கோரும்போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய நில ஆவணங்களின் நகல் கேட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பங்கள் அளித்து வந்தனர். ஆனால், நில ஆவணங்களின் நகல்களை வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்வையிட்டார்.
இதனையடுத்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை வருடம் வாரியாக ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நில ஆவணங்களின் நகலை கேட்டால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.