கோவை நாச்சிபாளையத்தில் கடைக்குச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயம் - பரபரப்பு..!

நாச்சிபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான சுப்புலட்சுமி, கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால், அவரது தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுப்புலட்சுமி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி, திருப்பூரில் உள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதற்கு தந்தை ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டிலிருந்த சுப்புலட்சுமி நேற்று மாலை கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சுப்புலட்சுமி கிடைக்காததால் தந்தை ஜெயராஜ், மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகின்றனர்.

கடைக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...