நாச்சிபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான சுப்புலட்சுமி, கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால், அவரது தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுப்புலட்சுமி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சுப்புலட்சுமி, திருப்பூரில் உள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதற்கு தந்தை ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டிலிருந்த சுப்புலட்சுமி நேற்று மாலை கடைக்கு சென்றுள்ளார்.
ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சுப்புலட்சுமி கிடைக்காததால் தந்தை ஜெயராஜ், மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகின்றனர்.
கடைக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுப்புலட்சுமி, திருப்பூரில் உள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதற்கு தந்தை ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டிலிருந்த சுப்புலட்சுமி நேற்று மாலை கடைக்கு சென்றுள்ளார்.
ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சுப்புலட்சுமி கிடைக்காததால் தந்தை ஜெயராஜ், மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுப்புலட்சுமியை தேடி வருகின்றனர்.
கடைக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.