கோவை ஈச்சனாரி மற்றும் அரிசிபாளையத்தில் உள்ள தனியார் ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மது விற்பனை - இருவர் கைது.

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈச்சனாரி மற்றும் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 31 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையிலான போலீசார் நேற்றிரவு குறிப்பிட்ட அந்த ரெஸ்டாரண்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரெஸ்டாரண்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அன்புராஜை கைது செய்தனர்.

இதேபோல் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் சோதனை செய்த போலீசார், அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...