பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வீடுகளுக்கே சென்று கண்காணிக்கிறோம் - கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பாக நடைபெற்ற சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையர், 300 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.



கோவை: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,ரோட்டரி கிளப் சார்பாக பெண் குழந்தைகளுக்குசைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராககோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, 300 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையாளர், நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது முதல் சைக்கிளை வாங்கினேன். அந்த சைக்கிளும் குலுக்கல் பரிசு மூலம் கிடைத்தது. பள்ளி பருவத்தில் நாம் ஓட்டிய சைக்கிள் பல்வேறு நினைவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

குழந்தைகள் படிப்பு, விளையாட்டு என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் இயற்கையின் பரிசு. கோவை மாநகரில் குழந்தைகள் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளை பிடிப்பதை தாண்டி குற்றங்களை தடுக்கவும், குழந்தைகளை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம்.

குடிசை பகுதிகள், சில முக்கிய தெருக்களில் சிறு நூலகம் அமைத்துள்ளோம். பெண் பாதுகாப்பு இல்லாத குறிப்பாக ஒற்றை பெற்றோர், மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள் மற்றும் குடிபழக்கத்திற்கு அடிமையான பெற்றோர் உள்ள வீடுகளுக்கு நேரடியாக பெண் காவலர்கள் சென்று அவ்வப்போது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்.



பொதுவாக ரோந்து வாகனத்தில் அடிக்கடி தெருக்களில் செல்லும் போது பொதுமக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணருவார்கள் அது மிகவும் முக்கியம். அதேபோல, பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கே சென்று அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை நடத்தி வருகிறது, என்றார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர், முன்னாள் கவர்னர் சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...