கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் - பரபரப்பு.

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகில் உள்ளடேன்டீ கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா, பெரியகல்லார், சின்னகல்லார், ரயான் டிவிசன், பத்தாம்பாத்தி, ஆகிய எஸ்டேட்களை மூடுவதற்கு டேன் டீதலைமை நிர்வாகம் குன்னூர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதை அடுத்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று அப்போது வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் இடம் எஸ்டேட்நிர்வாக மேலாளர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகத்தின்தோட்டம் அலுவலர்கள் தொழிலாளர்களை சந்தித்தனர்.

அப்போது, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறவும், 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குன்னூர், கூடலூர் பகுதியில்உள்ள டேன் டீ நிர்வாகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.



இதை தொடர்ந்து மக்கள் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஊழியர்கள், இந்த எஸ்டேட்டில் 500க்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக நாங்கள் இங்கு வேலை செய்து வருகிறோம். எஸ்டேட் மூடப்பட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எஸ்டேட் பகுதியில் அலுவலர்கள் எந்த ஒரு பதிலும் சொல்லாததால் நீண்ட நேரம் கொட்டும் மழையில் தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...