கோவையில் குடிபோதையில் அரசு குளிர்சாதன பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

நேற்று இரவு கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு குளிர்சாதன பேருந்து மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், போலீசாரின் விசாரணையில் குடிபோதையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு அரசு குளிர் சாதன பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இந்நிலையில் பேருந்தானது, ஜி.கே.என்.எம் மருத்துவமனை அருகே கடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் வலதுபுறம் இருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.இந்நிலையில், கல் வீச்சு சம்பவம்தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிசார் பேருந்தின் மீது கல்வீச்சு நடைபெற்றதை குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது,, பேருந்து மீது கல்வீசியவர் தினேஷ் என்ற நபர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மது போதையில் இருந்த தினேஷ், வழியில் இருந்த கல்லை எடுத்து பேருந்து மீதுவீசியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியபோலீசார்,இது குறித்து தினேஷ் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தினேஷ் குடும்பத்தார் பேருந்து பழுதை சரி செய்து தருவதாக போலீசார் முன்னிலையில் ஒப்புக்கொண்டதால், பின்னர் தினேஷ் விடுவிக்கப்பட்டார்.

திடீரென அரசு பேருந்து மீது ஒருவர் கல் வீசி தாக்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள், போலீசாரின்விசாரணையில் மதுபோதையில் தான்கல் வீசப்பட்டது என்று தெரிய வந்ததுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...