கோவை சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளார்

உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி முழுக்க நகரத் திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதில் உக்கடம் பெரியகுளத்தில் நடைபெறும் நகரத் திட்டப்பணியின் மதிப்பீடானது ரூ.62.17 கோடி ஆகும். இப்பணியை இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள். நேரில் சென்று பார்வையிட்டார்.



இந்நலத் திட்டத்தில் மிதிவண்டி பாதை (Cycle Track), பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பர்வையாளர் மாடம் (Birds Watching Tower), கற்றல் மையம் (Learning Tower), அனுபவ மையம் (Experiance centre), Ghat plaza, நீர் திரையில் ஒலி, ஒளி காட்சி ஆகியவை அமையவுள்ளன இவற்றை நேரில் பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டுமானப்பணிகளை விரைவாக செய்து முடிக்க உத்தரவிட்டார்.



உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியில் தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தி, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார். மேலும், கற்றல் மையம், அனுபவ மையங்களில் நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், உள்நாடு மற்றும் வெளிநாடு பறவைகள் குறித்து தகவல்கள், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களையும் 3D வடிவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் பி.உமாதேவி, உதவிபொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...