கோவை கருமத்தம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது - 113 கிலோ குட்கா பறிமுதல்

கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக எடுத்துச் சென்ற வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரனை கைது செய்த போலீசார், கண்டெய்னர் லாரியுடன் 113 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனிப்படை போலீசார், அதிரடியாக ரோந்து சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனையில் அந்த வாகனத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் கண்டெய்னர் லாரி மற்றும் அதில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 113 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோத கும்பல் நடவடிக்கை ஒடுக்கப்பட்டு வருகின்றன.

போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைக்கலாம் என்றும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...