கோவையில், ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 9 ரவுடிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தில் போலீசார் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 88 ரவுடிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 17 ரவுடிகளின் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் மீதான இந்த "மின்னல் வேட்டை" தொடரும்.
கோவை மாவட்டத்தில் இதுபோன்ற ரவுடிசம் செய்யும் நபர்கள் குறித்த காவல்துறைக்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்", என்றார்.
இதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தில் போலீசார் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 88 ரவுடிகள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், 9 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 17 ரவுடிகளின் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் மீதான இந்த "மின்னல் வேட்டை" தொடரும்.
கோவை மாவட்டத்தில் இதுபோன்ற ரவுடிசம் செய்யும் நபர்கள் குறித்த காவல்துறைக்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்", என்றார்.