திடீர் விலை உயர்வின் காரணமாக தனியார் சிமென்ட் நிறுவனங்கள் போலியான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் பார்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டிய சிவில் இஞ்சினியர்ஸ் சங்கத்தினர், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
கோவை: கட்டுமானத் துறையில் அத்தியாவசியப் பொருளாக இருக்கும் சிமென்ட்-ன் விலை திடீரென மூட்டைக்கு ரூ.80 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமென்ட் விலையை உயர்த்தி இருப்பதாகவும், இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பொள்ளாச்சி தாலுக்கா சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சங்கத்தினர் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர் கூறியதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பு 380 ரூபாயாக இருந்த சிமென்ட், தற்போது 460 ரூபாயாக உயர்த்தி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வரும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு வன்மையாக கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மீண்டும் பழைய விலைக்கே சிமென்ட் மூட்டைகள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஏற்கனவே கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வீடு கட்டுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த விலை உயர்வு காரணமாக பொறியாளர்கள், கட்டுமான தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே சிமென்ட் விலையை குறைக்காத பட்சத்தில் பொதுமக்களோடு இணைந்து பொறியாளர்கள் நாடு முழுவதும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர் நிர்வாகத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தனியார் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமென்ட் விலையை உயர்த்தி இருப்பதாகவும், இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பொள்ளாச்சி தாலுக்கா சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சங்கத்தினர் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர் கூறியதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பு 380 ரூபாயாக இருந்த சிமென்ட், தற்போது 460 ரூபாயாக உயர்த்தி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வரும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு வன்மையாக கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மீண்டும் பழைய விலைக்கே சிமென்ட் மூட்டைகள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஏற்கனவே கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வீடு கட்டுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த விலை உயர்வு காரணமாக பொறியாளர்கள், கட்டுமான தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே சிமென்ட் விலையை குறைக்காத பட்சத்தில் பொதுமக்களோடு இணைந்து பொறியாளர்கள் நாடு முழுவதும் தனியார் சிமென்ட் உற்பத்தியாளர் நிர்வாகத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.