துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் உள்ள பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி மாணவர்கள், ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தி, மாணவர்கள் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
கோவை: துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே மற்றும் கிக் பாக்சிங் உட்பட பல்வேறு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி பள்ளியில், 11 வயது முதல் 20 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் என பலருக்கும் தற்காப்பு கலைகள் கற்று தரப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஏழமை நிலையில் உள்ளதால் சாதனைகள் செய்ய முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மாணவர்கள் மாவட்ட மாநில தேசிய அளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். இது குறித்து பயிற்சியளர் ஆனந்த்குமார் பேசியதாவது,
சிலம்பம், கராத்தே, வில் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் விருதுகளை இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சி கிடைக்க ஊக்கத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற பதக்கங்களுடன் வந்த மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.
இந்த பயிற்சி பள்ளியில், 11 வயது முதல் 20 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் என பலருக்கும் தற்காப்பு கலைகள் கற்று தரப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஏழமை நிலையில் உள்ளதால் சாதனைகள் செய்ய முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மாணவர்கள் மாவட்ட மாநில தேசிய அளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். இது குறித்து பயிற்சியளர் ஆனந்த்குமார் பேசியதாவது,
சிலம்பம், கராத்தே, வில் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் விருதுகளை இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சி கிடைக்க ஊக்கத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற பதக்கங்களுடன் வந்த மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.