பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்ற பதக்கத்துடன் ஊக்கத்தொகை கோரி கோவை மாவட்ட ஆட்சியரரிடம் மனு

துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் உள்ள பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி மாணவர்கள், ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தி, மாணவர்கள் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள அசோகபுரத்தில் பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே மற்றும் கிக் பாக்சிங் உட்பட பல்வேறு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி பள்ளியில், 11 வயது முதல் 20 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் என பலருக்கும் தற்காப்பு கலைகள் கற்று தரப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஏழமை நிலையில் உள்ளதால் சாதனைகள் செய்ய முடியவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில், மாணவர்கள் மாவட்ட மாநில தேசிய அளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். இது குறித்து பயிற்சியளர் ஆனந்த்குமார் பேசியதாவது,

சிலம்பம், கராத்தே, வில் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் விருதுகளை இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சி கிடைக்க ஊக்கத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பதக்கங்களுடன் வந்த மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...