நேற்று இரவு திருப்பூர் மாநகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ததையடுத்து மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.

இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சியின் 25வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.
இந்தப் பகுதியானது திருப்பூர் மங்கலம் செல்ல பிரதான சாலையாக உள்ள காரணத்தினால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகினர். மேலும் மழைநீர் தேங்கிய காரணத்தினால், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.

மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதியானது முறையாக செயல்படுத்தவில்லை. எனவே சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சியின் 25வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.
இந்தப் பகுதியானது திருப்பூர் மங்கலம் செல்ல பிரதான சாலையாக உள்ள காரணத்தினால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகினர். மேலும் மழைநீர் தேங்கிய காரணத்தினால், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.
மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதியானது முறையாக செயல்படுத்தவில்லை. எனவே சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.