திருப்பூர் வார்டு 25க்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

நேற்று இரவு திருப்பூர் மாநகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ததையடுத்து மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.



இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சியின் 25வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது வெளியேற வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.

இந்தப் பகுதியானது திருப்பூர் மங்கலம் செல்ல பிரதான சாலையாக உள்ள காரணத்தினால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகினர். மேலும் மழைநீர் தேங்கிய காரணத்தினால், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.



மூகாம்பிகை காலனி, அம்மன் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதியானது முறையாக செயல்படுத்தவில்லை. எனவே சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...