வால்பாறை வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் யானைகள் அருகே சென்று செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகளுக்கு அத்துமீறி சென்று ஆபத்தை உணராமல் யானைகளின் அருகே செல்பி எடுக்கும் சம்பவங்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் குட்டியிடனும் தேயிலைதோட்ட பகுதியில் ஆங்காங்கேசுற்றித் திரிந்து வருகின்றன.



இந்நிலையில், யானைகளை பார்ப்பதற்காகசுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வாறு அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல், யானைகளை புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல் செல்பியும், எடுத்து கொள்கிறார்கள். இதன் காரணமாக யானை - மனித மோதல் ஏற்படும் என்ற அச்சத்தில் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றின் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார்10 நாட்களாக12 காட்டு யானைகள் சிறிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்து தேயிலைத் தோட்டம் வழியாக கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்கிறது.



இதையறிந்த சுற்றுலாப் பயணிகளும் வால்பாறையில் உள்ள சுற்றுலா கைடுகளும் யானை இருக்கும் இடத்தை அறிந்து ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்கவும் செல்பி எடுக்கவும் செல்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததன் காரணமாக சுற்றுலா பயணிகளை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனவிலங்கு - மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...