மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூரில் பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

குட்டையூர் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவினர், சுமார் இரண்டரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மாதேஸ்வரன் கோயில் ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மேனகா தலைமையில், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் அடங்கிய காவல்துறையினர் மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோயில் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், மாதேஸ்வரன் கோயில் சாலை குட்டையூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த50 கிலோ எடை கொண்ட 49 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...