குட்டையூர் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவினர், சுமார் இரண்டரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மாதேஸ்வரன் கோயில் ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், கோவை குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மேனகா தலைமையில், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் அடங்கிய காவல்துறையினர் மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோயில் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், மாதேஸ்வரன் கோயில் சாலை குட்டையூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த50 கிலோ எடை கொண்ட 49 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கோவை குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மேனகா தலைமையில், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் அடங்கிய காவல்துறையினர் மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோயில் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், மாதேஸ்வரன் கோயில் சாலை குட்டையூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த50 கிலோ எடை கொண்ட 49 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.