நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவேஎச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி,நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, தலைநகர் சென்னையில் அதிகாலை மூன்று மணி முதல் கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழிகளிலும் மழை நீர் தேங்கி, பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஆங்காங்கே அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி,நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, தலைநகர் சென்னையில் அதிகாலை மூன்று மணி முதல் கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழிகளிலும் மழை நீர் தேங்கி, பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஆங்காங்கே அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.