வேளாண் காடுகள் வளர்ப்பில் மத்திய அரசுஅதிக ஆர்வம் காட்டி வருகிறது - கோவையில் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்

கோவையில் நடைபெற்ற வனத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், பிரதமர் மோடி, வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை: வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் (ஐ.எப்.ஜி.டி.பி.,), சிறப்பு ஆய்வுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.



முன்னதாக, ஐ.எப்.ஜி.டி.பி., யின், தாவர ஆராய்ச்சி மையம், மூலக்கூறு மரபியல் ஆய்வகம், மரபணு மாற்ற ஆய்வகம், திசு வளர்ப்பு ஆய்வகம், பழங்குடியினர் மையம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆய்வு செய்தார்.



இதனைதொடர்ந்து அவரது தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசு வழங்கிய நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இத்திட்டங்களால் கிடைத்த பலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இதன்பின், அமைச்சர் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது,



மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஐ.எப்.ஜி.டி.பி., பல்வேறு ஆராய்ச்சிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு, வேளாண் காடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, வேளாண் காடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் கிடைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், நாட்டின் வளர்ச்சிக்கும், வேளாண் காடுகள் அதிகரிப்புக்கும் உதவும்.

உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், ஏற்படும் இயற்கை பேரழிவுகளை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...