பல்லடம் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை - ஒடிசா மாநில தொழிலாளி கைது

திருப்பூர் பல்லடம் அடுத்த அக்ரி காலனி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநில தொழிலாளியை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிலோ குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தை அடுத்த அக்ரி காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வட மாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தேபாபிரட் பிஸ்வால் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 250 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்து, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...