கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – வடமாநில இளைஞர்கள் கைது…!

மதுக்கரை, ஈச்சனாரி பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் மதுக்கரை அருகே உள்ள ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திடமாக நின்றுக் கொண்டிருந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் பரோஸ் சர்மா (21) தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்ததும், மற்றொருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (19) சமோசா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் ஏஜெண்ட் மூலம் கஞ்சாவை வாங்கி அதனை கல்லூரி மாணவர்களை குறி வைத்து ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...