தாளியூர் பகுதியில் அடுத்தடுத்து 3 விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை..!

கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் இருந்த இரும்பு கதவை உடைத்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை, தக்காளி மற்றும் கீரை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தாளியூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை மதுக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளவாழை, தக்காளியை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தாளியூர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து மூன்று தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தக்காளி, கீரை ஆகியவற்றை சேதப்படுத்தியது.



அதனைத் தொடர்ந்து, நாகராஜ் என்பவரதுதோட்டத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திவிட்டு வெளியே வர முயன்ற போது தோட்டத்தை சுற்றியும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துக் கொண்டு யானை வெளியே வந்தது. இதையடுத்து நரசீபுரம் சாலையில் அந்த ஒற்றை யானை நடந்து சென்று வனப்பகுதிக்குள் புகுந்தது.

ஒற்றைக் காட்டு யானை இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...