கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழு தலைவர் ஆய்வு

கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.


கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவைக்கு வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம்பிரிக்கும் மையம், உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.



இன்று, முதற்கட்டமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்குச் சென்ற குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து அங்குள்ள மண் புழு உரம் தயாரிக்கும் மையம், மியாவாக்கி அடர்வனம் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். வெள்ளலூர் குப்பை கிடங்கினால் அப்பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொடர் தீ விபத்துகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...