கோவைக்கு வந்துள்ள நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.
கோவை: திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவைக்கு வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம்பிரிக்கும் மையம், உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.

இன்று, முதற்கட்டமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்குச் சென்ற குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து அங்குள்ள மண் புழு உரம் தயாரிக்கும் மையம், மியாவாக்கி அடர்வனம் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். வெள்ளலூர் குப்பை கிடங்கினால் அப்பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொடர் தீ விபத்துகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் சென்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவைக்கு வந்துள்ள கண்காணிப்பு குழுவின், தலைவர் நீதியரசர் முனைவர். ப. ஜோதிமணி தலைமையிலான குழுவினர் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே உள்ள குப்பை தரம்பிரிக்கும் மையம், உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கொள்ளவுள்ளனர்.
இன்று, முதற்கட்டமாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்குச் சென்ற குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து அங்குள்ள மண் புழு உரம் தயாரிக்கும் மையம், மியாவாக்கி அடர்வனம் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். வெள்ளலூர் குப்பை கிடங்கினால் அப்பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொடர் தீ விபத்துகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் சென்றனர்.