பொள்ளாச்சியில் வீட்டில் பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது - 2 இளம்பெண்கள் மீட்பு

பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த 55 வயது பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த பி.எஸ்.காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில், திவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டில் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து புரோக்கராக செயல்பட்ட 55 வயது பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களிடம் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, 2 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...