கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்ற விஜயகுமார் என்பவரை தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் முந்தி சென்ற தனியார் நிறுவன ஊழியரை துரத்திச் சென்று தாக்குதல் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியில் இருந்து கே.ராக்கிபாளையம் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு முன்பு 2 இளைஞர்கள் 2 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை விஜயகுமார் முந்தி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்தஇளைஞர்கள் விஜயகுமாரை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளைஞர்விஜயகுமாரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளார்.
இதனையடுத்து, கீழே விழுந்தஇளைஞர் எழுந்து சென்று, பின்னர் இருவரும் சேர்ந்து விஜயகுமாரை தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து விஜயகுமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் விஜயகுமாரை தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தமோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியில் இருந்து கே.ராக்கிபாளையம் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு முன்பு 2 இளைஞர்கள் 2 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை விஜயகுமார் முந்தி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்தஇளைஞர்கள் விஜயகுமாரை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளைஞர்விஜயகுமாரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளார்.
இதனையடுத்து, கீழே விழுந்தஇளைஞர் எழுந்து சென்று, பின்னர் இருவரும் சேர்ந்து விஜயகுமாரை தாக்கி அவரது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து விஜயகுமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் விஜயகுமாரை தாக்கிய கே.ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தமோகன்குமார் (35) மற்றும் கனகராஜ் (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.