ஈஷா லிங்கபைரவியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!

இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் வித்யாரம்பம் செய்து கொண்டனர்.


கோவை: விஜயதசமி தினமான இன்று (அக்.5) ஈஷா யோகா மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லிங்கபைரவியில் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



கல்வி மற்றும் பல்வேறு விதமான கலைகளை கற்க விரும்பும் குழந்தைகள் விஜயதசமி தினத்தன்று ‘வித்யாரம்பம்’ மேற்கொள்வது வழக்கம். அதன்படி, ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, காளம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் வித்யாரம்பம் செய்து கொண்டனர்.



சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஈஷா அவுட்ரீச் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி,சந்தேகவுண்டம்பாளையத்தில் செயல்படும் ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளியில் 69 பழங்குடி குழந்தைகள் முழு இலவச கல்வி பெறுகின்றனர்.

மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் பழங்குடி குழந்தைகளுக்கு தினமும் இலவச போக்குவரத்து வசதியும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் ஈஷா வழங்கி வருகிறது.

இதனால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...