கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா: ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் கத்தி போடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில், ஏராளமான தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், விஜய் தெசமே முன்னிட்டு



இக்கோவிலில் பாரம்பரியமான கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கத்தி போட்டு வழிபாடு செய்வர்.



ஒவ்வொரு ஆண்டும் இந்த கத்தி போடும் நிகழ்வானது பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வந்தடையும்.



இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, "வேஸ்க்கோ தள்ளி, தீசுக்கோ தள்ளி" என்ற இன்ற முழக்கங்களை எழுப்பி, கத்தியால் கை மற்றும் மார்பு பகுதிகளில் வெட்டிக் கொண்டே ஊர்வலமாக செல்வர்.



உடலில் ரத்தம் வழிந்தோடிய நிலையில், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே பக்தர்கள் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்ததை அடுத்து, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

இந்த திருவிழாவில், தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...