டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் கத்தி போடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை: டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில், ஏராளமான தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், விஜய் தெசமே முன்னிட்டு
இக்கோவிலில் பாரம்பரியமான கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கத்தி போட்டு வழிபாடு செய்வர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கத்தி போடும் நிகழ்வானது பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வந்தடையும்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, "வேஸ்க்கோ தள்ளி, தீசுக்கோ தள்ளி" என்ற இன்ற முழக்கங்களை எழுப்பி, கத்தியால் கை மற்றும் மார்பு பகுதிகளில் வெட்டிக் கொண்டே ஊர்வலமாக செல்வர்.
உடலில் ரத்தம் வழிந்தோடிய நிலையில், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே பக்தர்கள் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்ததை அடுத்து, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இந்த திருவிழாவில், தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.