திருப்பூரில் விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி; நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு..!

வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.



அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடை பெற்று வருகிறது.

அதிகாலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9&வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.



இதனையோட்டி, காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்தனர்.



பின்னர், குழந்தைகளின் நாவில் கோவில் நம்பூதிரிகள் தங்க வேலால் எழுதி, கல்விச் செல்வம் பெற இறையருள் கிடைக்க வாழ்த்தினர்.



அதேபோல, அரிசியிலும் தமிழ் எழுத்துகளை மற்றும் வார்த்தைகளை எழுத வைத்தனர். இதன் பின்னர், சிலேட்டுகளில் குழந்தைகளை பெற்றோர் அ, அம்மா, தமிழ் போன்றவற்றை எழுத வைத்தனர்.



தொடர்ந்து, 98வது ஆண்டாக நடக்கும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சுமார் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.



இதனால், அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...