வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருப்பூர்: நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.
இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடை பெற்று வருகிறது.
அதிகாலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9&வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனையோட்டி, காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர், குழந்தைகளின் நாவில் கோவில் நம்பூதிரிகள் தங்க வேலால் எழுதி, கல்விச் செல்வம் பெற இறையருள் கிடைக்க வாழ்த்தினர்.

அதேபோல, அரிசியிலும் தமிழ் எழுத்துகளை மற்றும் வார்த்தைகளை எழுத வைத்தனர். இதன் பின்னர், சிலேட்டுகளில் குழந்தைகளை பெற்றோர் அ, அம்மா, தமிழ் போன்றவற்றை எழுத வைத்தனர்.

தொடர்ந்து, 98வது ஆண்டாக நடக்கும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சுமார் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

இதனால், அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடை பெற்று வருகிறது.
அதிகாலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9&வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனையோட்டி, காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர், குழந்தைகளின் நாவில் கோவில் நம்பூதிரிகள் தங்க வேலால் எழுதி, கல்விச் செல்வம் பெற இறையருள் கிடைக்க வாழ்த்தினர்.
அதேபோல, அரிசியிலும் தமிழ் எழுத்துகளை மற்றும் வார்த்தைகளை எழுத வைத்தனர். இதன் பின்னர், சிலேட்டுகளில் குழந்தைகளை பெற்றோர் அ, அம்மா, தமிழ் போன்றவற்றை எழுத வைத்தனர்.
தொடர்ந்து, 98வது ஆண்டாக நடக்கும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சுமார் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
இதனால், அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது.