வெள்ளியங்காடு அன்சூர் குளத்தில் டீசல் படகுகளுக்கு பதிலாக துடுப்பு படகுகளை பயன்படுத்த மீனவர்கள் கோரிக்கை.

அன்சூர் குளத்தில் விற்பனைக்காக மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருவதால், டீசல் படகுகளை இயக்கினால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் துடுப்பு படகுகளை விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு பகுதியில் உள்ள அன்சூர் குளத்தில் டீசல் எஞ்சின் படகுகளை இயக்காமல், துடுப்பு படகுகளை இயக்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் அமைந்துள்ள அன்சூர் குளம், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இக்குளத்திற்கு, பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு - மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது.

இதனால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்சூர் குளத்தில் மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை வளர்த்து விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டீசல் படகு குளத்தில் இயக்கினால்,இதிலுள்ள மீன் குஞ்சுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 200 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் டீசல் படகிற்கு பதிலாக துடுப்பு படகை விட வேண்டும் என்றுமேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் பேசியதாவது,

இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ‌ ஆனால், இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன.அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...