சோகத்துரை சக்கலட்டி கிராம பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன்பெறும் விதமாக உருவாக்கப்பட்ட நூலகமானது காந்தி ஜெயந்தியையொட்டி திறக்கப்பட்டது.
நீலகிரி: உதகை அருகேயுள்ள கேத்தி பேரூராட்சியில் பொதுமக்கள் இணைந்து உருவாக்கிய நூலகம் காந்தி ஜெயந்தியையொட்டி திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அனைவரும் பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, காந்தி ஜெயந்தி விழாவையொட்டி திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த நூலகமானது, பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அனைவரும் பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, காந்தி ஜெயந்தி விழாவையொட்டி திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த நூலகமானது, பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.