கோவையில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - இயந்திரங்களுக்கு வாழை இலையில் படையிலிட்டு வழிபாடு

இயந்திரங்களுக்கு பூசையிட்டு, படையல் வைத்து ஆயுத பூஜையை கொண்டாடிய ஊழியர்கள், ஆண்டு முழுவதும் எங்களுக்காக உழைக்கும் மெசின்களுக்கு ஒரு நாள் ஓய்வு தந்து உரிய மரியாதை செய்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களில், ஸ்பேனர், மெசின்கள், பம்பு செட்களுக்கு வாழை இலை படையல் வைத்தும், பூமாலை அணிவித்தும் ஆயுதபூஜை விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கொரோனாவிற்கு பின் புத்துயிர் பெற்ற ஆயுத பூஜை

'ஆயுத பூஜை' என்று சொன்னாலே 'புதுப்பொலிவு' என்று பொருள்படும் அளவுக்கு பூஜைகள் அரங்கேறும். வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வீட்டில் உள்ள பொருட்களுக்கு எவ்வாறு பூஜைகள் செய்யப்படுகிறதோ, அதேபோல, அலுவலகங்கள் மட்டும் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜைகள் களைகட்டும்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜைகள் பெயரளவிலேயே நடைபெற்றன.

ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பட்டால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன, திறக்கப்பட்ட நிறுவனங்களிலும் கட்டுப்பாடுகளுடன் பணிகள் நடந்ததாலும் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெறவில்லை என்பதே உண்மை.

ஆனால், ஊரடங்கு முழுமையாக திரும்ப பெறப்பட்ட பின்னர் முதல் முறையாக ஆயுத பூஜை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



கோவையில் உள்ள பம்பு செட் மின் மோட்டார், டெக்ஸ்டைல் உதிர் பாகம் தயாரிப்பு, ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மெஷின்களுக்கு பூ, பழம், மாலை என படையலிட்டு மரியாதை



சிறு, குறு தொழில்களின் முதன்மையான உபகரணமாக இருக்கும் மெஷின்களுக்கு வாழை மரங்கள் கட்டி, பூ மாலையிட்டு சந்தனம் குங்குமம் பூசி, காகித தோரணங்களால் ஆயுத பூஜை களைகட்டியுள்ளது.



அதேபோல் சிறு சிறு தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பம்பு செட், மின் மோட்டார் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன.



பல்வேறு தொழிற்சாலைகளில் தொழில் சிறக்க லாபம் பெறுக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.



இதுவும் கடந்து போகும்...!

மூலப் பொருட்களின் விலை ஏற்றம் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கடந்து இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இனிவரும் காலக்கட்டத்தில் எந்த தொழில் நெருக்கடியும் இல்லாமல் சிறு, குறு தொழில் வீறு நடை போட வேண்டும் என்பதே முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் இந்த ஆயுத பூஜை வேண்டுதலாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

வருடம் முழுவதும் தங்களுக்காக ஓடி உழைக்கும் இயந்திரங்களுக்கு ஒரு நாள் ஓய்வு தந்து உரிய மரியாதை செய்வது எங்களின் கடமை என்று தெரிவிக்கும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியங்கள் கிடைக்கப்பெற்று, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதலாக உள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...