பல்லடம் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளை அமைத்திருந்த சாலையோர நடைபாதை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற வலியுறுத்திய நிலையில், வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பல்லடத்தில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட்டுக்கு முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறியுள்ளனர்.

மேலும் நடைபாதை வியாபாரிகளின் தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்ய முயன்றதால், நடைபாதை வியாபாரிகளுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பல்லடம் நகராட்சி சார்பில் முக்கியமான பண்டிகை தினத்தில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, பல்லடம் என்ஜிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட்டுக்கு முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறியுள்ளனர்.
மேலும் நடைபாதை வியாபாரிகளின் தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்ய முயன்றதால், நடைபாதை வியாபாரிகளுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பல்லடம் நகராட்சி சார்பில் முக்கியமான பண்டிகை தினத்தில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, பல்லடம் என்ஜிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.