பல்லடம் அருகே சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் - பரபரப்பு..!

பல்லடம் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளை அமைத்திருந்த சாலையோர நடைபாதை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற வலியுறுத்திய நிலையில், வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடத்தில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்லடம் மார்க்கெட்டுக்கு முன்புறம் நடைபாதை வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த பல்லடம் நகராட்சி அதிகாரிகள் கடைகளை போடக்கூடாது எனக் கூறியுள்ளனர்.



மேலும் நடைபாதை வியாபாரிகளின் தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்ய முயன்றதால், நடைபாதை வியாபாரிகளுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பல்லடம் நகராட்சி சார்பில் முக்கியமான பண்டிகை தினத்தில் கடைகளை போடக்கூடாது என தெரிவிப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, பல்லடம் என்ஜிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் காரணமாக மார்க்கெட் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பல்லடம் நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...