மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அனுமதியின்றி கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் நிலையில் அந்த வாகனத்தை பிடித்து கொடுத்தால் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சியில் அனுமதியின்றி கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும், வாகனத்தை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தி தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளேபாளையம் பகுதியில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரத்தில் கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
வேளாண் துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.
ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் ரேஷன் அரிசியை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தி தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளேபாளையம் பகுதியில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரத்தில் கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
வேளாண் துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.
ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் ரேஷன் அரிசியை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.