காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி மதுபானம் விற்பனை - 36 பேர் கைது

காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை பயன்படுத்தி மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்தி சிலா் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையில், தடையை மீறி மாநகரில் மதுபானங்களை விற்பனை செய்த 16 பேரும், புறநகரில் 20 பேரையும் என மொத்தம் 36 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...