கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற ஆறுமுகம் என்பவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்த நிலையில், போலீசார், லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள குழிக்காடு தோட்டத்து சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம்(32). கூலி தொழிலாளியான இவர் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி, இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சிவகாமி, செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மாதையன் விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குணசேகரன் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரத்தில் நடந்து சென்ற நபர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள குழிக்காடு தோட்டத்து சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம்(32). கூலி தொழிலாளியான இவர் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி, இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சிவகாமி, செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மாதையன் விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குணசேகரன் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரத்தில் நடந்து சென்ற நபர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.