கோவை அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சோகம்

கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற ஆறுமுகம் என்பவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்த நிலையில், போலீசார், லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள குழிக்காடு தோட்டத்து சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம்(32). கூலி தொழிலாளியான இவர் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி, இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சிவகாமி, செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மாதையன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குணசேகரன் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் நடந்து சென்ற நபர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...