கோவையில் வாழை இலை படையலுடன் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை

கோவை தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் புதிதாக வைக்கப்டுள்ள மையில் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி, வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



கோவை: நாளை ஆயுத பூஜையை வெகு விமர்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், கோவையில் வித்தியாசமான ஒரு ஆயுத பூஜை அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வழக்கமாக ஆயுத பூஜை அன்று டிவி, ஃபிரிட்ஜ், வாகனங்கள், அருவாமனை போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஆயுத பூசை செய்வர். அதேபோல தொழிற்சாலைகளில் உள்ளவர்கள், மெசின்களுக்கு பூசை செய்வார்கள்.



ஆனால் குசும்புக்கு பெயர்போன கோயமுத்தூரில் முக்காளி, சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள தொலைவு கல் (அல்லது) மைல் கல்லிற்கு மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி , வாழை இலை படையலிட்டு பூசை செய்துள்ள புகைப்படங்கள் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

மையில் கல்லுக்கு மாலையிட்டு, பூ விட்டு, பொட்டிட்டு என நெடுஞ்சாலைத் துறையினர் இந்த வேலையை செய்திருக்க மாட்டார்கள், எனவே, அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குல தெய்வமாக வழிபடுவதை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில், கோவையில் மைல் கல்லுக்கு ஆயுத பூசை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...