நல்லட்டிபாளையம் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு தரக்கோரி மேற்கு மண்டல எஸ்.பி-யிடம் தனியார் நிறுவன அதிகாரி புகார் மனு

நல்லட்டிபாளையம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சிலர் அபகரித்துள்ளதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி, மேற்கு மண்டல எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: நல்லட்டி பாளையம் பகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக கூறி மேற்கு மண்டல எஸ்.பி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு நல்லட்டிபாளையம் பகுதியில் சொந்தமான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, 2 ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து சிலர் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் ரகோத்தமன் புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2 வருடங்களுக்கு முன்பு நிலத்தை பிரித்து விற்பனை செய்ய ரூ.28லட்சம் கடனாக பெற்றேன்.

இதற்கு அடமானமாக அசல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களிலேயே பத்திரம் வேறோருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.

இதுகுறித்து பலமுறை காவல்துறை, முதல்வர் தனி பிரிவு, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலரிடம் தெரிவித்தும் கடந்த 2 ஆண்டுகளாக அலைகழிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது, ரகோத்தமனுடன் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ் ராமநாதன், மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், பூசாரிகள் சங்க தலைவர் பூபதி ராஜ், வடவள்ளி மண்டல நிர்வாகிகள் வினோத் நவீன் ஸ்ரீராம் மற்றும் தென்னிந்திய ஃபார்வேர்டு பிளாக் கட்சி மாநில நிர்வாகிகள் மாரி மறவன், ஐயர்தேவர், விக்கி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...