இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் இந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்ட நிலையில், தெற்கு வட்டாச்சியர் சரண்யா தலைமையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர், போலீசார், தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு இதுவரை ரூ.331 ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புபடி குறைந்தபட்ச ஊதியம் ரூ.721 ஐ வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்து வந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் குறைந்த பட்ச ஊதியத்தை கேட்டு நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதே போல், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் இந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்ட நிலையில், தெற்கு வட்டாச்சியர் சரண்யா தலைமையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர், போலீசார், தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில், ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளரகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கூறும் போது:
கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் நடைமுறைபடுத்த கோரி மாவட்ட முழுவதும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் காலை முதல் போராட்டத்தை துவங்கினர்.
இந்நிலையில் தெற்கு வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதில், 3 மாதத்திற்குள் ஊழியர்கள் கோரிய, ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்களுக்கு கழிவறையுடன் கூறிய ஓய்வு அறை கட்டித்தருவதாகவும், வார விடுமுறை, போனஸ் அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.321 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.721 வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புபடி குறைந்தபட்ச ஊதியம் ரூ.721 ஐ வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்து வந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் குறைந்த பட்ச ஊதியத்தை கேட்டு நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதே போல், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் இந்த வேலை நிறுத்ததில் ஈடுபட்ட நிலையில், தெற்கு வட்டாச்சியர் சரண்யா தலைமையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை முதல்வர், போலீசார், தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில், ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளரகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கூறும் போது:
கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் நடைமுறைபடுத்த கோரி மாவட்ட முழுவதும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், இ.எஸ்.ஐ மருத்துவமனை தூய்மை பணியாளர்களும் காலை முதல் போராட்டத்தை துவங்கினர்.
இந்நிலையில் தெற்கு வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதில், 3 மாதத்திற்குள் ஊழியர்கள் கோரிய, ஆட்சியர் அறிவித்த ரூ.721 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்களுக்கு கழிவறையுடன் கூறிய ஓய்வு அறை கட்டித்தருவதாகவும், வார விடுமுறை, போனஸ் அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.321 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.721 வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.