கோவை இடையர் வீதியில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - 4 பேர் கைது.

இடையர் வீதி சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி, ஆட்டோ ஓட்டுனர் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.



கோவை: இடையர் வீதி சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது.

அந்த வீடியோவில், நள்ளிரவில் 6 இளைஞர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளன.

சம்பவம் நடந்த இடம் எது என்று தெரிந்து கொள்ள வீடியோவை மீண்டும் பார்த்த காவலர்,இச்சம்பவம் இடையர் வீதியில் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்தார்.

இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் தகவல் அளித்த அவர், ரோந்து வாகனத்தில் மேலும் சில காவலர்களுடன் இடையர் வீதி பகுதிக்கு சென்றார். அப்போது விசாரித்ததில், அந்த வீடியோவானது கடந்த மாதம் 25ஆம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக (Sales Rep) பணியாற்றி வரும் அசோக்குமார் (30) என்பவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது.

இதனைதொடர்ந்து செல்வபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்களான செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரவிந்தகுமார் (27), வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த கூலிதொழிலாளி தினேஷ்குமார் (23) மற்றும் காந்திபார்க் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில், அசோக்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும்,வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவது குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...