கோவையில் களைகட்டியது ஆயுத பூஜை..! பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் விழாக்காலம் பூண்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பூக்கள் மட்டும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். அதன்படி, மல்லிகை, தாமரை பூ, அரளி போன்ற பூக்களின் விலை கிடிகிடுவன உயர்ந்துள்ளது.


கோவை: நாளை கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் பூக்களை வாங்க மக்கள் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் திருவிழாக்காலம் பூண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கலை இழந்து காணப்பட்ட ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருவிழாக்களை இவ்வாண்டு கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, பூஜைக்கு தேவையான பொருட்களான பொரி, பூ, ஊதுபத்தி, வாழை இலை, வாழை தோரணங்கள், தொழிற்சாலைகளை அலங்காரப்படுத்த கலர் பேப்பர்கள், போன்ற பல்வேறு பொருட்களை வாங்க கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாகவே பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், நாளை கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை ரூபாய் ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறது.

அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழிக் கொண்டை பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.

விலை உயர்வை பொருட்படுத்தாமல் மக்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் பூக்கள் மற்றும் பூஜை சாமான்களை வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...