வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்த போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்த மளிகை வியாபாரி உயிரிழந்தார்.
கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம், வேணுகோபால் லேஅவுட்டை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 71) மளிகை கடை நடத்தி வந்தார்.

இவரது வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துராஜ் மளிகை கடை நடத்தி வந்ததால், அவரது உடலுக்கு ஏராளமான வியாபாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் உறவினர்கள் வியாபாரிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துராஜ் மளிகை கடை நடத்தி வந்ததால், அவரது உடலுக்கு ஏராளமான வியாபாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் உறவினர்கள் வியாபாரிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.