கோவை பாப்பநாயக்கன்பாளையம் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்த போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்த மளிகை வியாபாரி உயிரிழந்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம், வேணுகோபால் லேஅவுட்டை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 71) மளிகை கடை நடத்தி வந்தார்.



இவரது வீட்டின் மாடியில் தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அதை 3-வது மாடியில் நின்று சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று கால் வழுக்கி 50 உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துராஜ் மளிகை கடை நடத்தி வந்ததால், அவரது உடலுக்கு ஏராளமான வியாபாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் உறவினர்கள் வியாபாரிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...