திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று பதவியேற்று கொண்ட சங்க தலைவர் சுப்பிரமணியம், திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
திருப்பூர்: கோவையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூருக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் இன்று அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர் .
பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே எம் சுப்பிரமணியம் பேசியதாவது,
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் தொழில்துறை மற்றும் திருப்பூரில் வளர்ச்சிக்கு பங்காற்ற பணியாற்ற இருக்கிறோம். தமிழக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில், அதனை திருப்பூர் வரை விரிவாக்கம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
குறைந்தபட்சம் 20,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு 20 சதவீத பின்னலாடை உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்யப்படும். லண்டன் மட்டும் யூரோ நாடுகளுடன் இணைந்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இருக்கிறோம்.
தீபாவளிக்கு பின்பு தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு திருப்பூர் பின்னலாடைத்துறை மீண்டும் வளர்ச்சியை அடையும்.
தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் விபத்து காப்பீடு அடையாள அட்டை ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் இன்று அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர் .
பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே எம் சுப்பிரமணியம் பேசியதாவது,
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் தொழில்துறை மற்றும் திருப்பூரில் வளர்ச்சிக்கு பங்காற்ற பணியாற்ற இருக்கிறோம். தமிழக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில், அதனை திருப்பூர் வரை விரிவாக்கம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
குறைந்தபட்சம் 20,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு 20 சதவீத பின்னலாடை உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்யப்படும். லண்டன் மட்டும் யூரோ நாடுகளுடன் இணைந்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இருக்கிறோம்.
தீபாவளிக்கு பின்பு தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு திருப்பூர் பின்னலாடைத்துறை மீண்டும் வளர்ச்சியை அடையும்.
தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் விபத்து காப்பீடு அடையாள அட்டை ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.