இன்றிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் கோவை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஏதுவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன.
கோவை: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இன்று, சனிக்கிழமையில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.

கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும் போதுமான பேருந்துகள் இல்லாததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மேலும் 70 பேருந்துகளை கூடுதலாக போக்குவரத்துத் துறையினர் இயக்கியுள்ளது மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது, என்றனர்.
இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இன்று, சனிக்கிழமையில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும் போதுமான பேருந்துகள் இல்லாததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மேலும் 70 பேருந்துகளை கூடுதலாக போக்குவரத்துத் துறையினர் இயக்கியுள்ளது மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது, என்றனர்.