கோவையில் இருந்து சீரடிக்கு இன்று இரவு 6-வது பாரத் கௌரவ் ரயில் புறப்பட்டது

தனியாருடன் இணைந்து இதுவரை ஐந்து 'பாரத் கவுரவ்' ரயில்' இயக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.


கோவை: தெற்கு ரயில்வேயின், 'பாரத் கவுரவ்' ரயில், இன்று கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது.

ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்க, தனியாருடன் இணைந்து பாரத் கவுரவ் ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுவரை, ஐந்து ரயில்கள் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, ஆறாவது ரயில், இன்று, கோவை வடகோவை ஸ்டேஷனில் இருந்து ஷீரடிக்கு (சாய்நகர்) இயக்கப்பட்டது.

இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா (பெங்களூரு), தர்மாவரம், மந்தராலயம் ஸ்டேஷன்களில் நின்று, அக்., 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சீரடி சென்றடையும்.

அதேபோல, மறு மார்க்கமாக அக்., 3ம் தேதி காலை 11 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்படும் ரயில், 4ம் தேதி மதியம், 3:00 மணிக்கு கோவை வந்தடையும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று இயக்கப்பட்ட ரயிலில், முதல் வகுப்பு ஏ.சி., இரண்டாம், மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி உட்பட, 14 பெட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...