தனியாருடன் இணைந்து இதுவரை ஐந்து 'பாரத் கவுரவ்' ரயில்' இயக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.
கோவை: தெற்கு ரயில்வேயின், 'பாரத் கவுரவ்' ரயில், இன்று கோவையில் இருந்து சீரடிக்கு புறப்பட்டது.
ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்க, தனியாருடன் இணைந்து பாரத் கவுரவ் ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுவரை, ஐந்து ரயில்கள் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஆறாவது ரயில், இன்று, கோவை வடகோவை ஸ்டேஷனில் இருந்து ஷீரடிக்கு (சாய்நகர்) இயக்கப்பட்டது.
இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா (பெங்களூரு), தர்மாவரம், மந்தராலயம் ஸ்டேஷன்களில் நின்று, அக்., 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சீரடி சென்றடையும்.
அதேபோல, மறு மார்க்கமாக அக்., 3ம் தேதி காலை 11 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்படும் ரயில், 4ம் தேதி மதியம், 3:00 மணிக்கு கோவை வந்தடையும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று இயக்கப்பட்ட ரயிலில், முதல் வகுப்பு ஏ.சி., இரண்டாம், மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி உட்பட, 14 பெட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்க, தனியாருடன் இணைந்து பாரத் கவுரவ் ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதுவரை, ஐந்து ரயில்கள் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஆறாவது ரயில், இன்று, கோவை வடகோவை ஸ்டேஷனில் இருந்து ஷீரடிக்கு (சாய்நகர்) இயக்கப்பட்டது.
இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா (பெங்களூரு), தர்மாவரம், மந்தராலயம் ஸ்டேஷன்களில் நின்று, அக்., 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சீரடி சென்றடையும்.
அதேபோல, மறு மார்க்கமாக அக்., 3ம் தேதி காலை 11 மணிக்கு ஷீரடியில் இருந்து புறப்படும் ரயில், 4ம் தேதி மதியம், 3:00 மணிக்கு கோவை வந்தடையும் என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று இயக்கப்பட்ட ரயிலில், முதல் வகுப்பு ஏ.சி., இரண்டாம், மூன்றாம் வகுப்பு, படுக்கை வசதி உட்பட, 14 பெட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.