பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என தகராறு செய்ய மூதாட்டியை தூண்டிவிட்டதாக அதிமுக நிர்வாகிகள் மீது திமுக ஐ டி பிரிவினர் மதுக்கரை போலீசில் புகார்

திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணத்தில் மூதாட்டி ஒருவரை வேண்டுமென்றே பேருந்தில் பயண சீட்டு தொடர்பாக நடத்துனரிடம் தகராறு செய்ய வைத்த அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ஐடி பிரிவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற பேருந்து மூதாட்டி ஒருவர் எனக்கு ஓசி பயணம் வேண்டாம் நான் டிக்கெட் வாங்கி பயணிக்கிறேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் துளசி அம்மாள் என்ற அந்த மூதாட்டியை வேண்டுமென்றே நடத்துனரிடம் தகராறு ஈடுபட வைத்தது, அதிமுகவினர் செய்த சதி என்று திமுக தொழில்நுட்ப பிரிவினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அந்த மூதாட்டியை இலவச பேருந்து திட்டத்தை குறித்து தவறாக பேசி, பேருந்து நடத்துனரிடம் சண்டையிடுமாறு தூண்டிவிட்டு அதை வீடியோ எடுத்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாக, த் திமுக தகவல் மற்றும் பிரிவினர் குற்றம் சாட்டினர்.

எனவே, மகளிருக்கான அரசின் திட்டத்தை தவறாக சித்தரித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய அதிமுகவினர் மீத உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக ஐடி பிரிவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...