ஆறு மாதங்கள் ஆகியும் வளர்ச்சிப் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை - வால்பாறை நகர மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

இன்று வால்பாறையில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்தல், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் மற்றும் நகர பகுதியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணை தலைவர் செந்தில் நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் இன்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக நீண்ட நாளாக கிடப்பில் இருந்த முடிஸ் சாலையை புதுப்பிக்க வேலை துவங்கியதையடுத்து நகரமன்ற கூட்டத்தில் அதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், தெருவிளக்குகள் வருத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய நகராட்சி உறுப்பினர்கள் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளதையும் அதனுடன் தெரு விளக்கு பற்றாக்குறை நிலவி வருவதையும் சுட்டிக் காட்டினர்.



மேலும், தெருவிளக்கு பிரச்சினை குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே நகர்மன்ற கூட்டத்தில் பேசி உள்ளதாக தெரிவித்த உறுப்பினர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். எனவே, உடனடியாக அனைத்து எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்கு பிரச்சனை தீர்த்து வைக்க கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பேசிய 15- வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஆறு மாதங்கள் ஆகியும் 21 வார்டுகளிலும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வால்பாறை நகராட்சி ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா ? என்ற சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டை நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்க காத்திருப்பதாகவும், விரைவில் அனுமதி பெற்று பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

இதையடுத்து பேசிய 21 வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி, "தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மூட உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. சிங்கோனா பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், எஸ்டேட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு தெருவிளக்கு அமைக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, யானைக் கூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.



இதையடுத்து, 9 வார்டு உறுப்பினர், மகுடேஷ்வரான் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அம்பேத்கார் சிலை நகர் பகுதியில் வைப்பதற்கு நகர மன்றதில் ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...