ஆனைமலை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மாதாந்திர ஆய்வுக் கூட்டம்: காலாண்டுத் தேர்வு விடுமுறையில் வாசிப்பு இயக்கம் தொடங்க முடிவு

ஆய்வுக் கூட்டத்தில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் படித்த இல்லம் தேடிக் கல்வி மாணவ மாணவிகளுக்கும், அதனை வழி நடத்திய தன்னார்வலர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின், வட்டாரக் குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.



ஆய்வுக் கூட்டத்தில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் படித்த இல்லம் தேடிக் கல்வி மாணவ மாணவிகளுக்கும், அதனை வழி நடத்திய தன்னார்வலர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவை அரசுப் பொருட்காட்சிப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும் மற்றும் கோவை புத்தக கண்காட்சியில், இல்லம் தேடிக் கல்வி அரங்கப் பணியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கூட்டத்தில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் குழந்தைகளுக்கு வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி நடத்துதல்.



அரசால் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களை தினசரி வாசிக்கப் பயிற்சி தருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தன்னார்வலர் கட்டாயம் கலந்துகொண்டு, கல்விக்குழுவுடன் மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து கலந்துரையாடி ஆலோசனை பெற்றுச் செயல்படுத்துதல்.

மாணவர் வருகையை அதிகப்படுத்துதல். பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களை மையத்தில் நடத்துதல். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படச் செயலாற்றுதல். பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்துத் திட்டத்தின் தொடர்ச்சியாக இல்லம் தேடி கல்வி மையங்களிலும் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை தொடக்க வகுப்பு மையங்களில் கடைபிடித்தல். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலர்கள், சின்னப்பராஜ், கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் எடிசன் பெர்னார்டு, வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஜெயந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வ சரோஜினி, விசாலாட்சி, ஆசிரியர் மணிகண்டன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...